×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"தூக்கி போட்டு மிதிக்க தான் நிறையபேர் இருக்காங்க" - திரைத்துறை குறித்து தமிழ் நடிகை ஆதங்கம்..!!

நம்மை மிதிக்கத்தான் தயாராக இருக்கிறார்கள் - திரைத்துறையில் உள்ள வலிகள் குறித்து மனம்திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.!

Advertisement

 

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த சொப்பன சுந்தரி திரைப்படம் நாளை திரையரங்கில் ரிலீசாக உள்ளது. படத்தை இயக்குனர் சார்லஸ் இயக்கினார். 

ஆரம்ப கட்டத்தில் தனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் நடித்த நடிகை, தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தியுள்ளார். 

இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், "நம்மைப் போன்ற கடுமையாக உழைப்பவரை மேலே கை தூக்கி விட யாரும் இருக்க மாட்டார்கள்.

ஒரு சிலர் இருக்கலாம். நம்மை தூக்கி போட்டு மிதிக்க, கீழே கொண்டு செல்ல அதிகபேர் இருக்கின்றனர். அவற்றைத் தாண்டி நாம் வளர்வது மிகப்பெரிய சவால்" என்று தெரிவித்தார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Aishwarya rajesh #tamil cinema #cinema news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story