×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"ஜெயினுடைய அந்த பழக்கம் தான் அஞ்சலியை பிரிவதற்கு காரணம்" உண்மையை உடைத்த பிரபலம்..

ஜெயினுடைய அந்த பழக்கம் தான் அஞ்சலியை பிரிவதற்கு காரணம் உண்மையை உடைத்த பிரபலம்..

Advertisement

2002ம் ஆண்டு "பகவதி" படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்தவர் ஜெய். தொடர்ந்து சென்னை 28, எங்கேயும் எப்போதும், சுப்ரமணியபுரம், சரோஜா, வாமனன், ராஜா ராணி போன்ற பல நல்ல படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

2007ம் ஆண்டு "கற்றது தமிழ்" படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. தொடர்ந்து படங்களில் நடித்து, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அஞ்சலி, 2020ம் ஆண்டு வெளியான "பாவக்கதைகள்" வெப் சீரிஸில் ஒரு பகுதியில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாகவும், பின்னர் பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இருவருமே தாங்கள் காதலிப்பதாகவோ, பிரிந்துவிட்டதாகவோ சொல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், " ஜெய்யும், அஞ்சலியும் திருவல்லிக்கேணியில் பிளாட் ஒன்றை வாங்கியிருந்தனர். காதல் முறிவுக்குப்பிறகு அஞ்சலி அந்த பிளாட்டை விற்றுவிட்டார். ஜெய்யின் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் தான் இவர்கள் காதல் முறிவுக்கு காரணம்" என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jai #anjali #Kollywood #Gossips #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story