×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கேரளா வெள்ளத்திற்கு நடிகர் ஷாருகான் எவ்வளவு நிதி உதவி செய்தார் தெரியுமா?

Actor sharuk khan donated 21 lakhs to kerala

Advertisement

கடந்த 100  வருடங்களில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடும் வெள்ளத்தில் கேரளாவில் உள்ள 16  மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றது.

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்கள் அனைவரும் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். உண்ண உணவு இல்லாமல் , தங்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் உலகின் பல மூலைகளில் இருந்து கேரளா மக்களுக்கு நிவாரணங்கள் வந்துகொண்டே இருக்கின்றது..

இந்நிலையில், பாலிவுட் கிங் கான் என செல்லமாக அழைக்கப்படும் ஷாருக்கான் , கேரளா வெள்ளத்திற்கு தனது சொந்த அறக்கட்டளை மூலம் நிவாரணம் வழக்கியுள்ளார்.


இந்தியாவில் அனைவராலும் அறியப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடத்தி வரும்  மிர் அறக்கட்டளை சார்பாக 21 லட்சம் வெல்ல நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

பல்வேறு மாநிலங்கள் நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்கியுள்ளனர். ஆனால் சமூக வலைத்தளங்களில் நடிகர் ஷாருக்கான் மட்டும் ரூ.5 கோடி வழங்கி உள்ளதாக வதந்தி பரவியுள்ளது. தற்போது அவர் 21 லட்சம் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sharuk khan #kerala flood #flood relief #fund donation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story