×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

50 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகர் ராஜ்கிரண்.. ஏன் தெரியுமா? முதல்மனைவி இவர்தான்..!

Actor raj kiran second marriage details

Advertisement

நடிகர் ராஜ்கிரணுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ராஜ்கிரணும் ஒருவர். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த இயற்பெயர் காதர் மொய்தீன். பின்னர் சினிமாவிற்கா ராஜ்கிரண் என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒருகோடி ரூபாய் சம்பளம் வாங்கியதும் ராஜ்கிரண் தான் என்பது பலரும் அறியாத செய்தி. நடிகர் எனப்தையும் தாண்டி இவர் ஒரு  தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என மூன்று குதிரையிலும் சவாரி செய்தவர் ராஜ்கிரண்.

மேலும் பல புதுமுக நடிகர்களை திரையுலகுக்கு அறிமுகப்படித்திய பெருமையும் இவருக்கு உண்டு. வைகைப்புயல் வடிவேலுவையே இவர்தான் முதலில் அறிமுகப்படுத்தினார்.

இவரது திருமண வாழ்க்கையை பொறுத்தவரை, துவக்கத்தில் செல்லம்மா என்ற பெண்ணை திருமணம் செய்த இவர், குறுகிய காலத்திலேயே கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்துவிட்டார். பின்னர் தனது 50 வயதில் பத்மஜோதி என்னும் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தார் ராஜ்கிரண், இப்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Raj kiran #second marriage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story