காதல் பொங்க, உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை ராதிகா வெளியிட்ட பதிவு! அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா? வாழ்த்தும் ரசிகர்கள்!!
தங்களது 20வது திருமண விழாவை முன்னிட்டு நடிகை ராதிகா சரத்குமார் மிகவும் நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கிழக்கேபோகும் ரயில் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி,கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தனது திறமையால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த ராதிகா தற்போதும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி அவர் சின்னத்திரையிலும் களமிறங்கி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற சித்தி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். பார்ப்பதற்கு எப்பொழுதுமே கம்பீரமாக இருக்கும் ராதிகாவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.
இந்நிலையில் ராதிகா கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இன்றுடன் அவர்களுக்கு திருமணமாகி இருபது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை மகிழ்ச்சியுடன் ராதிகா தனது இன்ஸ்டாகிராமில், எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்தது விதியின் வினோதம். இந்த அற்புதமான ஒற்றுமையான பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டு கணவருடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362