×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சலார் படத்திற்காக சொந்த குரலில் 5 மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்: நடுநடுங்கப்போகும் திரையரங்கம்.!

சலார் படத்திற்காக சொந்த குரலில் 5 மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்: நடுநடுங்கப்போகும் திரையரங்கம்.!

Advertisement

பிரசாந்த் நீல் இயக்கத்தில், ரவி பஸ்ரூர் இசையில், பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாரன், மீனாக்ஷி சௌதாரி, சுருதி ஹாசன், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீரெட்டி, ராமச்சந்திரா ராஜு உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் சிலர். 

இப்படம் வரும் டிசம்பர் 22ம் தேதி உலகளவில் திரைக்கு வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் சிலர் திரைப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகிறது. 

ரூ.400 கோடி பொருட்செலவில் தயாராகியுள்ள திரைப்படம், உலகளவில் வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.ஜி.எப் பாணியில் உருவாகியுள்ள படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன், படம் வெளியாகும் பல மொழிகளில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசி இருக்கிறார். தனது குரல் பதிவுகளில் இருந்த குறைகள் அனைத்தையும் சரிசெய்து, டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், பிரித்வியின் ஒவ்வொரு குரல் பதிவுக்கும் திரையரங்கம் அதிரப்போகிறது என பாராட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema #Salaar Movie #Prithviraj Sukumaran #Prabhas
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story