×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நான் நிர்வாணமாக இருக்கும்போது ஹீரோயின் அம்மா என்ன பாத்துட்டாங்க" நடிகர் சித்தார்த்தின் கலகலப்பான பேட்டி.!

நான் நிர்வாணமாக இருக்கும்போது ஹீரோயின் அம்மா என்ன பாத்துட்டாங்க நடிகர் சித்தார்த்தின் கலகலப்பான பேட்டி.!

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சித்தார்த். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். சங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

முதல் திரைப்படமே இவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் நடித்த 'ஜிகர்தண்டா' திரைப்படம் நேஷனல் அவார்ட் வென்றுள்ளது.  தற்போது 'டக்கர்' எனும் திரைப்படத்தில் நடித்து திரையில் வெளிவர தயாராகிக் கொண்டிருக்கிறது.

இது போன்ற நிலையில், சமீபத்தில் சித்தார்த் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் பாய்ஸ் திரைப்படத்தில் ஆடை இல்லாமல் மவுண்ட் ரோடில் ஓடும் காட்சியை படமாக்கப்பட்டது குறித்து பேசியிருப்பார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

பேட்டியில் அவர் கூறியதாவது, "பாய்ஸ் திரைப்படத்தில் நான் நிர்வாணமாக ஓட வேண்டும் அந்த காட்சியை எடுக்க எட்டு நாள்தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது. எட்டு நாட்களுமே நான் நிர்வாணமாக ஓடினேன். அந்த படப்பிடிப்பின் போது நான் இரண்டு உள்ளாடைகள் அணிந்து இருப்பேன். அதை கழட்டும்போது ஹீரோயின் அம்மா என்னை பார்த்து அலறி விட்டார் என்று கலகலப்பாக பேட்டியில் பேசியிருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Siddarth #Dakkar #movie #Kollywood #boys
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story