×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அழுகிய நிலையில் ஐந்து வயது மகள்.! ஒரு வாரமாக தாய் செய்த அதிர்ச்சி காரியம்!! வெளியான பகீர் சம்பவம்!!

5 year child deadbody hold by mother q week

Advertisement

அமெரிக்காவில் டெக்ஸாஸ் என்ற பகுதியில் வசித்து வருபவர் பிரிசில்லா டோரஸ். இவருக்கு சீரா பாடினோ என்ற ஐந்து வயது மகள் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பிரிசில்லா வீட்டில் இருந்து அவரது மகளின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. 

இறந்து பல நாட்கள் ஆனநிலையிலும் அவர் தனது மகளின் அழுகிய உடலை தன்னுடன் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார்.  இந்நிலையில் இதுகுறித்து அவரிடம் தீவிர  விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது அவர் எனது காதலனால் என் மகள் கழிப்பறை ஆசிட்டை குடித்துவிட்டாள். அதனால் அவளது உடம்பில் தீக்காயம் போல ஏற்பட்டது. 

இந்நிலையில் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என எண்ணியபோது, இதுகுறித்து மருத்துவமனையில் கேள்வி கேட்பார்கள் என பயந்து அவரை அழைத்து செல்லவில்லை, இந்நிலையில்  அவள் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.

 இந்நிலையில் அவளை பிரிய மனமில்லாமல் அவரது உடலை போர்வையால் போர்த்தி என்னுடன் வைத்திருந்தேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து போலீசாரால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#5 year girl #dead #America
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story