திடீரென எகிறிய தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,080 உயர்வு! இன்றைய தங்கம் விலை நிலவரம்....
அக்.29 தேதியன்று தங்க விலையில் திடீர் உயர்வு; ஒரு சவரன் ரூ.1,080 உயர்ந்து புதிய விலை ரூ.86,680 என நிர்ணயம். வெள்ளி விலையும் அதிகரித்து முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.
முதலீட்டு சந்தையை கண்கானித்து வரும் நுகர்வோரும் தங்க வர்த்தகர்களும் இன்று திடீர் உயர்வை சந்தித்துள்ளனர். கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்க விலை மீண்டும் மேல் நோக்கி பாய்ந்துள்ளது.
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,080 உயர்வு
ஆபரணத் தங்கம் விலையில் இன்று (அக்.29) பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலைமையுடன் ஒப்பிடுகையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை நேரடியாக ரூ.1,080 உயர்ந்துள்ளது. இதன் மூலம் 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.11,210 ஆக உயர்ந்துள்ளதுடன், 8 கிராம் அடிப்படையிலான ஒரு சவரன் தங்கத்தின் புதிய விலை ரூ.86,680 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலையும் உயர்வு பாதையில்
தங்க விலை உயர்வுடன், வெள்ளி விலையும் சிறிய அளவில் உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.166 என்றும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,66,000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: Breaking: தங்கம் விலை மீண்டும் உயர்வு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது! இன்றைய தங்கம் விலை நிலவரம்....
திடீர் விலை மாற்றங்கள் மீண்டும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் தங்க விலை எந்த திசையில் செல்கிறது என்பது மீது அனைவரும் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 சரிவு! குஷியில் நகைப்பிரியர்கள்…!!!