உச்சத்தை தொட்டு ஷாக் கொடுத்த தங்கம்! ரூ.75 ஆயிரத்தையும் தாண்டிய தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்...
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.75,040 ஆக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது மக்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக விலை குறைந்ததாக நினைத்தவர்களுக்கு திடீரென உயர்வு எதிர்பாராததொரு மாற்றமாக உள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ரூ.9,380 ஆகவும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.75,040 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை சவரனுக்கு ரூ.74,960 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்ட தங்கம், இன்று மீண்டும் விலை ஏறியுள்ளது.
முந்தைய விலை நிலவரம்
சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.60,000 க்கும் குறைவாக விற்கப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது ரூ.75,000 ஐ கடந்துள்ளது என்பது பெரும் அதிர்ச்சி தகவலாக காணப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் நகை வாங்கும் பெண்கள் இடையே இதனால் கவலை நிலவுகிறது.
இதையும் படிங்க: பல்டி அடிக்கும் தங்கம் விலை.. இன்றைய தங்கம் விலை நிலவரம்! அதிருப்தியில் பாமர மக்கள்....
வெள்ளி விலை நிலவரமும் உயர்வு
தங்க விலை மட்டுமல்லாமல் வெள்ளி விலையும் இன்று உயர்வு கண்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.126.00 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.1,26,000 ஆகவும் விற்கப்படுகிறது. இதுவும் சந்தையில் வாடிக்கையாளர் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.
விலை மீண்டும் குறையுமா?
இவ்வளவு உயர்வுகளுக்குப் பிறகு, மக்கள் இடையே ஒரு பெரிய கேள்வி எழுந்துள்ளது – "தங்கம் விலை மீண்டும் குறையுமா?" என. எதிர்கால தினங்களில் சர்வதேச சந்தை நிலவரங்கள் ஆகியவற்றை பொறுத்து விலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதே நிபுணர்களின் கணிப்பு.
விலை உயர்வுகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் நெருக்கடியில் இருக்கின்றனர். வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது.
இதையும் படிங்க: கவலையில் நகைபிரியர்கள்.... ஒரே நாளில் உச்சத்தை தொட்ட தங்கம் ! இன்றைய தங்கம் விலை நிலவரம்....