×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை வகுப்பறையிலேயே அடித்து உதைத்த பொதுமக்களால் பரபரப்பு!

school teacher sex tourcher in student

Advertisement

அரசு பள்ளி மாணவியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதால் ஆசிரியரை வகுப்பறைக்கு சென்று தாக்கிய பெற்றோர் மற்றும் பொது மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கண்ணக்குருக்கை மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கண்ணன்.

இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறையின் போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பில் கணித ஆசிரியர் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அப்போது கூச்சலிட்டு அவரிடம் இருந்து தப்பித்த அந்த மாணவி இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆசிரியர் கண்ணன் பாடம் நடத்திக் கொண்டிருந்த வகுப்பறைக்கு சென்று சரமாரியாக தாக்கி தர்ம அடி கொடுத்தனர் இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியர் கண்ணனை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Spark #thirvannamalai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story