×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

7 வயது குழந்தையை துடிக்கத்துடிக்க பலாத்காரம் செய்த 35 வயது கொடூரன்; ரேவரியில் தொடரும் பாலியல் அட்டூழியம்!

7 year old child raped by 35

Advertisement

டெல்லியைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்திலும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரியானா மாநிலம் ரேவரியில் சென்ற மாதம் சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த 19 வயது கல்லூரி மாணவி ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மிகவும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த சம்பவம் நடைபெற்ற ஒரே மாதத்தில் மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை அதே பகுதியில் அரங்கேறியுள்ளது. இந்த முறை 7 வயது சிறுமி 35 வயது காமக்கொடூரனால் மிகவும் மோசமான நிலையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த 7 வயது சிறுமியின் தந்தை ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளி ஆவார். 32 வயதான ராஜன் என்ற கொடூரன் சிறுமிக்கு இனிப்புகள் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவன் தப்பி ஓடி விட்டான்.

 மிகவும் மோசமான நிலையில் இருந்த அந்த சிறுமிக்கு அதிகமான ரத்தம் வெளியேறியுள்ளது. அதனையும் பொருட்படுத்தாது அந்த கொடூரன் சிறுமியை சின்னாபின்னமாக்கி உள்ளான். ஒருவழியாக தானாகவே எழுந்து அந்த சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார்.

தடுமாறி ரத்தம் சொட்ட சொட்ட வந்த மகளை பார்த்த பெற்றோர் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர் காவல் துறையிலும் புகார் அளித்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#7 year girl raped by 35 year old man in rewari #haryana rape
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story