மனைவியுடன் இரவில் குதூகலிக்க வேண்டுமா?.. இன்றே தெரிந்துகொண்டு கட்டிலில் அசத்துங்கள்.!
தம்பதிகள் தங்களின் துணையுடன் இன்பமாக இருக்க, பாலுணர்வை அதிகரிக்க சாப்பிட வேண்டியது குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
திருமணம் முடிந்த தம்பதிகள், தங்களின் துணையுடன் இன்பமாக இருக்க தேவைப்படும் பாலுணர்வை அதிகரிக்க சாப்பிட வேண்டியது என்ன? எதனை சாப்பிட கூடாது என இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கவழக்கம், எதிர்கால தலைமுறைக்கு பெரும் பிரச்னையை கட்டாயம் ஏற்படுத்தும். இன்றளவில் சில வருடங்களில் சாப்பிட்ட மாறுபட்ட உணவுகளால் தாம்பத்திய வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தாம்பத்தியத்தின் அடிநாதமாக இருக்கும் காம உணர்வை அதிகரிக்க முக்கிய பங்கு ஹார்மோன்களுக்கு உள்ளன.
ஆண்களுக்கு டெஸ்டிரோஜன், பெண்களுக்கு ஈஸ்டிரோஜன் ஹார்மோன்கள் காம உணர்வை அதிகரிக்க உதவி செய்கிறது. புரோஜெஸ்டிரான் என்ற ஹார்மோன் பாலுணர்வுக்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த ஹார்மோன்களின் அளவினை தூண்டும் உணவுகளே காமத்தை அதிகரிக்கும் உனவுகள் ஆகும். திருமணம் முடிந்த தம்பதிகள் கட்டாயம் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் எடையை அதிகரிக்கும் உனவுகளை தவிர்ப்பது நல்லது. எளிதில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் உணவுகள், ஜீரணகுறைபாடை ஊக்குவிக்கும் துரித மற்றும் சாலையோர உணவுகள், எண்ணெயில் தயார் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும். இவை ஏற்படுத்தும் தொந்தரவு காரணமாக தாம்பத்திய வாழ்க்கை தடைபடலாம்.
சாப்பிட வேண்டியது:
இரவுநேர உணவுக்கு பின்னர் வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி போன்றவை உடலுக்கு நன்மை செய்யும். டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் அளவை அதிகரித்து காம உணர்வை ஏற்படுத்தும். இரத்த ஓட்டத்தை சீராக்கும் பணியை பூண்டு சிறப்பாக செய்கிறது. இரத்தத்தில் சேரும் அதிகப்படியான கொழுப்பு பூண்டை கரைத்து, ஆணுறுப்பின் விறைப்பு தன்மைக்கு உதவும் நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தோசின் உற்பத்திக்கு அடித்தளம் இடுகிறது. கடல் உணவுகளின் மூலமாக கிடைக்கும் ஜிங்க் சத்தும் காம உணர்வை தூண்டும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். கடல் உணவுகள் மற்றும் நண்டு போன்றவற்றை திருமணம் ஆன புதுமண தம்பதிகள் அதிகளவில் சாப்பிடலாம்.
மிளகாய், இஞ்சி, பட்டை மற்றும் கிராம்பில் உள்ள காரம், உடலில் இருக்கும் எண்டார்பின் வேதிப்பொருளை சுரக்க செய்யும். மிளகாய் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய துண்டிப்பை அதிகரிக்கும். காரம் கொண்ட மசாலா பொருட்கள் காம உணர்வை தூண்டும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். பரங்கிக்காய் விதையை உடைத்தால் கிடைக்கும் பருப்பை சாப்பிட்டால், அதில் உள்ள புரதசத்து விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும். மலட்டுத்தன்மையை நீக்க உதவி செய்யும்.
கேரட்டில் இருக்கும் கனிமம் மற்றும் வைட்டமின்கள் ஆணுறுப்பு தசைகளுக்கு வலிமையை அதிகரிக்கும். பிறப்புறுப்பின் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். அதனைப்போல டார்க் சாக்லேட் மூலையில் சந்தோசத்தை தூண்டிவிட்டு, காம உணர்வை தூண்டுகிறது. தாம்பத்தியத்திற்கு முன்னர் டார்க் சாக்லேட் சாப்பிட்டு, தாம்பத்திய செயல்பாடுகளை தொடங்கலாம். அவகேடா பழத்தையும் சாப்பிடலாம்.
தவிர்க்க வேண்டியது:
இன்றளவில் உள்ள வாழ்க்கை முறையானது முந்தைய காலங்களை போல கிடையாது. இது தாம்பத்திய நேரத்தின் அளவை குறைகிறது. அதிகளவு வேலைப்பளு, அதனால் ஏற்படும் மன உளைச்சல் என நெருக்கமான நேரங்கள் தம்பதிகளிடையே குறைந்து வருகிறது. வேலைகள் ஒருபுறம் இருந்தாலும், மனைவியுடனான காதல் - கூடலுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் தாம்பத்தியத்திற்கு மிகப்பெரிய எதிரி. இதனை கட்டாயம் கைவிடவேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் இன்றைய இளம் தலைமுறை இருக்கிறது. மீறி அதனை கையில் எடுத்தால், அதனால் ஏற்படும் எதிர்கால குடும்ப பாதிப்பையும், தாம்பத்திய வாழ்க்கை பாதிப்பையும் அவர்களே எதிர்கொள்ள வேண்டும். வெள்ளம் வரும் முன் அணையை கட்டுவது போல, புகை - மதுவை விடுவது நல்லது.
வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை குறைக்க வேண்டும் என எண்ணி, சிலர் புதினா சுவிங்கத்தை சாப்பிட்டு தாம்பத்தியத்தில் ஈடுபட முயற்சி செய்கின்றனர். புதினாவின் இயற்கையாக உள்ள வேதிப்பொருள் டெஸ்டிரோஜன் அளவை குறைத்து, காம இன்பத்தை தவிர்க்க வழிவகை செய்திடும்.
இரவு வேளைகளில் உணவு சாப்பிட்டதும், சிலர் ஜீரணத்திற்காக சோடா போன்ற பானத்தை குடிக்கின்றனர். சோடா உடலில் வறட்சி ஏற்பட வழிவகை செய்யும். உடல் பருமனையும் ஊக்குவிக்கும். இது காம உணர்வையும் குறைக்கும் தன்மை கொண்டது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
துரித உணவகம், சாதாரண உணவகம் என உணவகத்தில் வாங்கி சாப்பிடும் பழக்கத்தை அனைவரும் கைவிட வேண்டும். உணவகத்தில் சுவைக்காக சேர்க்கப்படும் ரசாயனம் எரிச்சல், தலைவலி போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். இதனால் காம உணர்வு என்பது காணாமல் போகும்.
அளவுக்கு அதிகாமாக காபி குடிப்பதால் அட்ரீனல் சுரப்பியை பாதித்து, அதன் செயல்பாடுகளை குறைகிறது. இதனால் ஏற்படும் மன அழுத்தம் பாலுணர்வை பெரிதளவில் பாதிக்கிறது. துரித உணவுகளை போல பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட பால் பாலுணர்வை குறைக்கும். அதனைப்போல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள், விதைகள் இல்லாத பழங்களை தவிர்க்க வேண்டும்.
நாம் சாப்பிடும் உனவுகளில் எந்தெந்த சத்துக்கள் இருக்கிறது?. இதில் பாலுணர்வை கட்டுப்படுத்தும் வேதிப்பொருள் உள்ளதா? என்பது பற்றிய விழிப்புணர்வு குறைந்தபட்ச அளவில் இருக்க வேண்டும்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362