கர்ப்பகாலத்தில் அந்த விசையத்தை எப்படியெல்லாம் செய்யலாம்; கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்
karppakala uravu, karppaka sex, antharanka uravu karppakalam, karppa uravu, antharanka uravu karppakalam, karappam antharanka uravu

கர்ப்பத்தின் போது உடலுறவு கொள்வது குறித்து, பலரும் பல கருத்துக்கள் சொல்வதுண்டு. அவற்றில் எதை நம்புவது அல்லது நம்பாமல் இருப்பது என ஆண்களும் பெண்களும் குழம்பிப் போயிருப்பர்.
பொதுவாக, குழந்தை உருவான முதல் மூன்று மாதங்கள் மற்றும் குழந்தை பிறப்பதற்கு முன்னான ஒரு வாரம்/மாதம் என உடலுறவு கொள்ளாமல் இருப்பது நல்லது.
உடலுறவின் போது, வயிற்றுப்பகுதி சுருங்காமலும், அதில் எந்த அழுத்தமும் இருக்காதவாறு பாதுகாப்புடன் இருப்பது நல்லது. அப்படி ஏற்பட்டால், கருக்கலைப்பு அல்லது குழந்தையின் உடல் பாகங்களில் பாதிப்பு ஏற்பட்டு, ஊனமாகும் நிலை ஏற்படலாம்.
குழந்தை பிறப்பு நெருங்கும் காலகட்டத்தில், உடலுறவு கொண்டால், குறைமாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புகள் உள்ளது. சில சமயங்களில், உடலுறவு கொள்ளும் போது, குழந்தை பிறப்பினை தூண்டச் செய்துவிடும். ஆகையால், உடலுறவுக் கட்டுப்பட்டு சாதனமான காண்டம் போன்றவற்றின் உதவியுடன் உடலுறவில் ஈடுபடலாம்.
தீவிரமான ஆணுறுப்பு நுழைப்பு குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கும்’- என்று சொல்லப்படுகிறது. ஆனால், இது உண்மையல்ல. ஏனெனில் குழந்தை உருவானவுடனே தாயின் உடல் பல மாற்றங்களை அடைகிறது. குழந்தை மிகவும் பாதுகாப்பாக பனிக்குடத்தின் உள்ளே வளர்கிறது. இந்நிலையில் ஆண் விந்து உள்நுழைவதை பெண்ணின் உடலிலுள்ள கோழைத்திரவம் தடுத்துவிடும். ஆனாலும் பாதுகாப்பாக குழந்தையை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.
நீங்கள் உடலுறவில் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களின் வலி, இன்பம், துன்பம் எல்லாம். நீங்கள் தீவிரமாக ஈடுபட்டால், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தீவிரமான விளைவு, வலி ஏற்படலாம்; மெதுவாக ஈடுபடும் போது எவ்வித பாதிப்புமின்றி இன்பத்தை அனுபவிக்கலாம்.
நீங்கள் வாய்மொழியால், உடலுறவினைப் பற்றி பேசும் பொழுது, உங்களுக்குள் உணர்ச்சிகள் மேலெழும்பி, உங்கள் உடலில் மாற்றங்களை விளைவிக்கலாம்; அதீத உணர்ச்சிகளால், உங்கள் இரத்தத்தில் குமிழிகள் ஏற்பட்டு, தீவிரப் பிரச்சனைகள் ஏற்படலாம்.