18 Plus: பெண்களுக்கு அந்த உணர்வு எந்த வயதில் ஏற்படும்? ஆய்வுகள் சொல்லும் உண்மை இதோ.!
பெண்களின் நெருக்க விருப்பம் எந்த வயதில் அதிகரிக்கிறது? என்பது குறித்து ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
காதல், நெருக்கம், ஹார்மோன் மாற்றங்கள் வயதுக்கேற்ப பெண்களின் மனநிலையை மாற்றும்.
தொடரும் ஆய்வுகள்:
ஆண் - பெண் உறவுகளில் அன்பும் நெருக்கமும் முக்கியமான கூறுகளாக கருதப்படுகின்றன. காதல் மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன நெருக்கமும் உறவுகளை வலுப்படுத்தும் ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆனால், பெண்கள் எந்த வயதில் அதிகமாக நெருக்கத்தை விரும்புகிறார்கள் என்பது குறித்த தெளிவான புரிதல் பலருக்கும் இல்லை. சமூக கட்டுப்பாடுகள், தவறான புரிதல்கள் மற்றும் வெளிப்படையாக பேசுவதற்கான தயக்கம் காரணமாக, பெண்களின் உணர்வுகள் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை. இதனை புரிந்து கொள்ளவே, பல்வேறு வயது பெண்களை கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களே உஷார்.! இனி அலட்சியம் செய்யாதீர்கள்.!
சமூக ரீதியிலான பயம்:
ஆய்வுகளின் அடிப்படையில், பெண்களின் நெருக்கம் குறித்த விருப்பம் வயதுக்கேற்ப மாறுபடுகிறது என்பது தெரியவந்துள்ளது. பொதுவாக இளமையில் பெண்கள் காதலை அதிகம் முன்னிலைப்படுத்துவார்கள் என கருதப்படுகிறது. அது ஒரு அளவிற்கு உண்மைதான் என்றாலும், ஆழமான மன - உடல் நெருக்கம் குறித்த விருப்பம் வயதுடன் சேர்ந்து மாறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைப் பருவத்திலிருந்து இளமைக்குச் செல்லும் காலகட்டத்தில் உணர்ச்சிகள் அதிகமாக இருந்தாலும், சமூக பயங்கள் அதனை வெளிப்படுத்த தடையாக இருக்கின்றன.
எதிர்காலம் குறித்த பயம்:
20 முதல் 23 வயது வரையிலான பெண்களில் சுமார் 70 சதவீதம் பேர் அன்பும் நெருக்கமும் விரும்புவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த வயதில், குடும்ப எதிர்பார்ப்புகள், சமூக கட்டுப்பாடுகள், எதிர்காலம் குறித்த அச்சங்கள் போன்றவை அவர்களை தங்களின் உணர்வுகளை அடக்கிக் கொள்ள வைக்கின்றன. இதனால், அவர்களுடைய விருப்பங்கள் முழுமையாக வெளிப்படுவதில்லை.
தனிப்பட்ட நெருக்கம்:
23 முதல் 35 வயது வரையிலான பெண்களில், நெருக்கத்தை முக்கியமாகக் கருதுவோர் விகிதம் குறைந்து சுமார் 30 சதவீதம் ஆக இருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த காலகட்டத்தில் தொழில், குடும்ப பொறுப்புகள், குழந்தை வளர்ப்பு போன்ற வாழ்க்கைச் சுமைகள் மனதை அதிகமாக ஈர்க்கும் காரணமாக, தனிப்பட்ட நெருக்க விருப்பங்கள் பின்னணிக்கு செல்லக்கூடும்.
ஆய்வில் வந்த முடிவுகள்:
ஆனால், 36 வயதுக்கு மேற்பட்ட பெண்களில், சுமார் 80 சதவீதம் பேர் ஆழமான அன்பும் நெருக்கமும் விரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மருத்துவ மற்றும் உளவியல் ஆய்வுகளின்படி, 27 முதல் 45 வயது வரையிலான காலகட்டத்தில் பெண்களுக்கு நெருக்கம் குறித்த ஈர்ப்பு அதிகரிக்கிறது. 40 வயதுக்கு பிறகு, ஹார்மோன் மாற்றங்கள், மனநிலை முதிர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால், பெண்கள் தங்களின் உணர்வுகளை தெளிவாக புரிந்து கொண்டு வெளிப்படுத்தும் நிலைக்கு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: "தள்ளிப்படுக்க எதுக்குடா கல்யாணம்?" கணவரை ஆள் வைத்து அடித்த மனைவி.. கணவன் அதிர்ச்சி முடிவு.!