மனைவியுடன் கள்ளக்காதல் வயப்பட்ட இளைஞர் அடித்தேகொலை; அண்ணன், தங்கையின் பரபரப்பு காரியம்.!



Virudhunagar Sivakasi Man Killed by Brother and Sister 

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, கட்டளைப்பட்டி, காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மூர்த்தி (வயது 38). இவரின் மனைவி வெண்ணிலா (வயது 34). தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில், தற்காலிக ஓட்டுநராக மூர்த்தி வேலை பார்த்து வருகிறார். 

இதனால் வாரம் ஒருமுறை மட்டுமே அவர் வீட்டிற்கு வருவார். இந்நிலையில், வெண்ணிலாவிற்கு, இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சகோதரர் முறைகொண்டவரின் மகன் கணேஷ் குமார் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஒருகட்டத்தில் இவ்விவகாரம் மூர்த்திக்கு தெரியவரவே, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெண்ணிலா தனது மகளுடன் மாயமாகினார். அவரை கண்டறிந்துதரக்கூறி காவல் நிலையத்திலும் மூர்த்தி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. 

காவல் நிலையத்தில் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், வெண்ணிலாவின் முடிவால் செய்வதறியாது திகைத்தனர். மேலும், அவர் தனது கணவருடன் செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, அவரின் சகோதரி நந்தினி (வயது 26) சேர்ந்து கணேஷ் குமாரை கட்டியால் கடுமையாக தாக்கியுள்ளனர். 

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கணேஷ் குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோதும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நந்தினி மற்றும் மூர்த்தியை கைது செய்தனர்.