காவலரின் மனைவியுடன் கள்ளக்காதல்; இளைஞர் துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.!



Virudhunagar Rajapalayam Affair Issue women Killed 


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், துரைசாமிபுரம், செங்குட்டுவன் தெருவில் வசித்து வருபவர் மைனர் என்ற அழகர்சாமி. இவர் தமிழ்நாடு காவல்துறையில், சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். 

இவரின் மனைவி மாலதி. தம்பதிகளுக்கு திருமணமாகி அஸ்வினி ப்ரியா, அஸ்வித் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சென்னையில் வேலை பார்த்து வரும் அழகர்சாமி, விடுமுறைக்கு ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில், துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமியின் மகன் சரவணன் (வயது 36), டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். திருமணமாகாத இவருக்கும், காவலரின் மனைவி மாலதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இவர்களுக்கிடையே கள்ளத்தொடர்பாக மாற, இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் சரவணன், அவரின் நண்பர்கள் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்தனர். 

அச்சமயம் அங்கு வந்த அழகர்சாமி, அவரது சகோதரர் பாண்டியராஜன், நண்பர் அழகுராஜ் ஆகியோர் சரவணனை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து தப்பி சென்றனர். 

தகவல் அறிந்து வந்த ராஜை நகர தெற்கு காவல் துறையினர், சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணையில் மேற்கூறிய சம்பவம் அம்பலமாகவே, அதிகாரிகள் மூவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.