என் தங்கச்சிய நீ எப்படி காதலிப்ப?.. பெட்ரோல் பங்க் ஊழியர் அடித்தே கொலை.. கோவையில் அதிர்ச்சி.!



Coimbatore Love Issue Girl Brother Killed Girl Love Boy 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இருகூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன் (வயது 23). இவர் கோவையில் வசித்தது வரும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். 

ஜெயசந்திரன் காதலித்து வரும் பெண்ணின் சகோதரர் சுருளி (வயது 28). சுருளிக்கு ஜெய்சந்திரனை பிடிக்கவில்லை. இதனால் தனது தங்கையிடம் இருந்து விலகி இருக்குமாறு அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். 

கடந்த ஏப்ரல் 26ம் தேதி ஜெயசந்திரன் பணியாற்றி வரும் பெட்ரோல் பங்குக்கு சென்ற சுருளி, சந்திரனை தனியாக பார்த்து பேசவேண்டும் என கூறியுள்ளார். அங்கு சுருளியுடன் வந்த அவரின் நண்பர்கள் அஜித், நவீன், கார்த்திக் உட்பட நால்வர் கும்பலும் இருந்துள்ளது. 

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது எழுந்த வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த சுருளி மற்றும் அவரின் நண்பர்கள் ஜெய்சந்திரனை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஜெயசந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தற்போது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.