"சஸ்பென்சோட சாவு" - இன்ஸ்டாவில் மரண எச்சரிக்கை; ரௌடி போட்டுத்தள்ளப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி மெசேஜ்.!



Chennai Villivakkam Rowdy Murder Case 

 

சென்னையில் உள்ள வில்லிவாக்கம் மேம்பாலம் பகுதியில், கடந்த திங்கட்கிழமை சரத் குமார் என்பவர் ஐவர் கும்பலால் கொடூரமாக ஓடஓட விரட்டி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வகையிலேயே, ஐவர் கும்பல் ரௌடி சரத் குமாரை கொலை செய்ததாக ராஜாமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தது. 

காவல் துறையினரின் விசாரணையில் மறைந்த ரௌடி சரத்குமார், கடந்த 2019ம் ஆண்டு ஜானகிராமன் என்ற பாதிரியாரின் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இருந்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவரை கும்பல் கொலை செய்துள்ளது. கொலைக்கு முன்னதாக இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் சரத் குமாரை கொலை செய்திடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவமும் தெரியவந்துள்ளது.