"சாவிலாவது இணைவோம்" - திருமணமான காதலியுடன் முன்னாள் காதலன் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.! சைல்ட் குட் லவ் சோகங்கள்.!



Uttar Pradesh Banda Love Couple Suicide Jumped in front of Train 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பண்டா, அம்ரித் விஹார் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா குஷ்வாஹா. இவரின் கணவர் பகவன்தாஸ். தம்பதிகளுக்கு கடந்த ஜனவரி 21 அன்று திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமணத்தில் அர்ச்சனாவுக்கு விருப்பம் இல்லை எனினும், அவரது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் நடந்துள்ளது. ஏனெனில் அர்ச்சனா தனது இளம் வயதில் இருந்து விலாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். 

இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பால் அர்ச்சனா பகவன்தாஸை கரம்பிடித்தார். எனினும், அவர் திருமண வாழ்க்கையில் நிம்மதியாக இல்லை. 

சில மாதங்கள் கணவருடன் இருந்த பெண்மணி, முன்னாள் காதலரை சந்தித்து பேசியுள்ளார். இருவரும் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்களின் அடையாள ஆவணங்கள் வாயிலாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அதன் பின்னரே விபரம் தெரியவந்துள்ளது.