மதிப்பெண் குறைந்ததால் ஆத்திரம்.. மகளை துடிக்க துடிக்க குத்திக்கொன்ற தாய்.! 



Karnataka Bangalore Mother Killed Daughter 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பனசங்கரி பகுதியில் வசித்து வருபவர் பத்மஜா (வயது 20). இவரின் 17 வயதுடைய மகள், இடைநிலை கல்வி பயின்றுவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். 

சமீபத்தில் தேர்வு முடிவுகளும் வெளியான நிலையில், சிறுமி குறைந்த மதிப்பெண் பெற்றதாக தெரியவருகிறது. இதனால் தாய் - மகள் இடையே வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது. 

Latest news

வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மகள் தாயை கத்தியால் குத்த, ஆவேசமடைந்த தாய் மகளை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் சிறுமி இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பத்மஜாவை சிறையில் அடைத்தனர்.